Pages
இந்தியாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணை கொலை செய்தது யார் என்பதை நான்கு நாட்களுக்கு பின் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் Ramachandrapuram-வில் இருக்கும் Sompeta Mandal பகுதியில் கடந்த 16-ஆம் திகதி Kanakalatha Mahanti என்ற 22 வயது இளம் பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
இதனால் இது குறித்து அவரின் தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால், பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இதற்காக பொலிசார் ஆதாரங்களை திரட்டிய போது, அந்த பெண்ணின் உடல் அருகே முடி இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன் பின் அதை வைத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் Tata Rao என்ற நபர் தான் இந்த கொலையை செய்துள்ளான் என்று சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த நபரின் உடல்களில் நகங்களால் ஏற்பட்ட காயங்கள் இருந்ததால், பொலிசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்துள்ளது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், Kanakalatha Mahanti ஊருக்கு வெளியில் இருக்கும் குளம் ஒன்றில் தினமும் குளிக்க செல்வது பழக்கம்.
அந்த குளத்திலிருந்து சற்று தொலைவில் ஒயின்ஷாப் இருந்துள்ளது. Kanakalatha Mahanti தினமும் வருவதைக் கண்ட அந்த நபர், சம்பவதினத்தன்று தனியாக வந்ததை தனக்கு சாதகப்படுத்தி கொள்ள முயன்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து கடந்த புதன் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபர், அதன் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment