ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் பிரமுகர் என்பவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக இளம் பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார் அவர் புகாரில் கூறியதாவது:
என்னுடைய கணவனுக்கு ராதாகிருஷ்ணன் மது வாங்கி கொடுத்து அடிமையாக்கி வைத்துள்ளார் இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் நான் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தென். என்னை மருத்துவமனையில் பார்க்க வந்த ராதாகிருஷ்ணன் பணத்தை கொடுத்து இது போன்று செய்ய கூடாது என்று கூறினார்.
பின்னர் வீட்டிற்கு வந்த ராதாகிருஷ்ணன் என்னுடன் இரு உன்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அவரால் நான் 5 முறை கற்பமாகியுள்ளேன் என்று கூறினார்.
மேலும் இனிமேலும் அவருக்கு பயந்து இருக்க முடியாமல் தான் புகார் அளிக்க வந்துவிட்டேன் என்று போலீசிடம் தெரிவித்தார். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே கல்லூரி மாணவி ஒருவரை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment