வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வெளியூருக்கு காதலருடன் சென்று லாட்ஜில் தங்கிய இளம்பெண்.. நடந்த விபரீத சம்பவம்.. ஆதாரத்துடன் சிக்கிய கடிதம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

வெளியூருக்கு காதலருடன் சென்று லாட்ஜில் தங்கிய இளம்பெண்.. நடந்த விபரீத சம்பவம்.. ஆதாரத்துடன் சிக்கிய கடிதம்


இந்தியாவில் திருமணமான இளம் பெண் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவர் கடந்த 5ஆம் திகதி தனது காதலர் லோகேஷ் உடன் ஹைதராபாத்துக்கு வந்தார்.
பின்னர் இருவரும் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு சங்கீதா வேறு நபருடன் அடிக்கடி போன் பேசுகிறார் என அவருடன் லோகேஷ் சண்டை போட்டுள்ளார்.
இருவரின் சண்டை குறித்து அறிந்து அங்கு வந்த லோகேஷ் நண்பர் ரேகன், லோகேஷை சமாதானப்படுத்தி தன்னுடன் வெளியில் அழைத்து சென்றார்.

இதையடுத்து மனவேதனையில் இருந்த சங்கீதா கடிதம் எழுதிவிட்டு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் சங்கீதா சடலத்தை கைப்பற்றிவிட்டு அவர் எழுதியிருந்த கடிதத்தையும் சில ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கடிதத்தில், என் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இல்லை, என் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என விரும்புகிறேன் என எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், சங்கீதாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கணவரிடம் விவாகரத்து கோரி அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் தான் லோகேஷ் உடன் அவருக்கு காதல் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக லோகேஷ் மற்றும் அவர் நண்பர் ரேகனை விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.


http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html


http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html


அதிகம் படிக்கப் பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment