வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கணவனை துபாய்க்கு அனுப்பிவிட்டு மனைவி செய்த காரீயம் "கணவன் திரும்பி வந்த பின் நடந்த விபரீதம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

கணவனை துபாய்க்கு அனுப்பிவிட்டு மனைவி செய்த காரீயம் "கணவன் திரும்பி வந்த பின் நடந்த விபரீதம்

விருதுநகர் மாவட்டம், காரியா பட்டி பக்கத்தில் உள்ள பள்ளத்து பட்டியை சேர்ந்தவர் இளையராஜா . இவர் துபாயில் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். 



இவருடைய மனைவி முத்துலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் தனித்து வசித்து வந்தார் . கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீடு திரும்பிய இளையராஜா திடிரென்று மாயமானார். இந்நிலையில் இவருடைய மனைவி முத்துலட்சுமி தனது கணவனை காணவில்லை என்று காரியாப் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் , அதன் பிறகு போலிசார் தனிப்படை அமைத்து இளையராஜாவை தேடினார்கள். 



ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து முத்துலட்சுமி மீண்டும் காவல் நிலையம் சென்று தனது கணவனை காணவில்லை என்று கொடுத்த புகார் என்னாச்சு என்று கேட்டு சத்தம் போட்டுள்ளார் , இதனால் மீண்டும் இளையராஜாவை தேடும் பணி தொடங்கியது. போலிஸ் விசாரணையில் மனைவி முத்துலட்சுமி மீது சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.



அதன் பிறகு போலிசார் மேற்கொண்ட விசாரணையில் முத்துலட்சுமிக்கும் பள்ளத்து பட்டியை சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது அம்பலமானது. மணிகண்டனை பிடித்தது விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டான் , இருவருக்கும் இடையே உள்ள உறவை அறிந்த கணவன் இளையராஜா அவசர அவசரமாக துபாயிலிருந்து வந்து இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார். 



இதனால் ஆத்திரமடைந்த இருவரும் இளையராஜா தூக்கும் போது தனது நண்பர்களுடன் அடித்து கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டான் . அதன் பிறகு மனைவி அவரின் காதலன் மற்றும் கொலைக்கு உதவிய நண்பர்கள் அனைவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். கணவனை கொலை செய்து 2 ஆண்டுகள் கழித்த மனைவி மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

No comments:

Post a Comment