வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தீவிர காதலில் கர்ப்பமான நர்ஸ் !! திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஆற்றில் தள்ளி கொலை செய்த காதலன் !!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

தீவிர காதலில் கர்ப்பமான நர்ஸ் !! திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஆற்றில் தள்ளி கொலை செய்த காதலன் !!

கன்னியாகுமரி அருகே காதலித்தால் கர்ப்பமான நர்ஸ் ஒருவர் தனது காதலனிடம் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அவரை ஆற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளையை சேர்ந்தவர் ஸ்ரீஜா நித்திரவிளையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 20–ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் ஸ்ரீஜா குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பிணமாக மிதந்தார். இதை தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர்.
ஆனால், ஸ்ரீஜா கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஸ்ரீஜா சாவு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
ஸ்ரீஜா வேலை பார்த்து வந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், மற்றும் அவரின் தோழிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஸ்ரீஜா வாலிபர் ஒருவரை காதலித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து  போலீசார் ஸ்ரீஜா செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அந்த எண் களியக்காவிளை பகுதியில் சிக்னல் காட்டியது. அந்த எண்ணை வைத்திருந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் எஸ்.டி. மங்காடு, கோழிபொற்றவிளையை சேர்ந்த விபின் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஸ்ரீஜாவை கொலை செய்ததை விபின் ஒப்புக் கொண்டார்.  அவர் அளித்த வாக்கு மூலத்தில் தான் நித்திரவிளை– களியக்காவிளை வழித்தடத்தில் சொந்தமாக வேன் வைத்து, ஓட்டி வருவதாகவும், அந்த  வேனில் ஸ்ரீஜா வேலைக்கு சென்று வந்தபோது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது என்றும் தெரிவித்துள்ளார்.
இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஒரு முறை ஸ்ரீஜாவுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்ததாகவும், அதைப் பயன்படுத்து தொடர்ந்து பல முறை உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதானல் ஸ்ரீஜா கர்ப்பமடைந்தார். இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தி வந்தார். ஆனால் ஸ்ரீஜாவை திருமணம் செய்ய விரும்பாத விபின் திருமணத்துக்கு தாலி வாங்க செல்வோம் எனக்கூறி மோட்டார் சைக்கிளில் குழித்துறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்குள்ள தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் மேல் பகுதியில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அவரை திடீரென மேலிருந்து கீழே தள்ளி கொன்றார். இதையடுத்து போலீசார் விபினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment