வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருச்சியில் ஏராளமான பெண்கள் பலாத்காரம்: வாலிபரை கட்டிவைத்து தர்ம அடி போட்ட மக்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

திருச்சியில் ஏராளமான பெண்கள் பலாத்காரம்: வாலிபரை கட்டிவைத்து தர்ம அடி போட்ட மக்கள்



திருச்சி: நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறி வாலிபர் ஒருவரை கட்டிவைத்து அடிக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


‘நூறு பெண்களை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் இவன்’ தான் என்று தலைப்பிட்டு, பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு பதிவு உலா வந்து கொண்டிருக்கிறது.


அதில் 23 முதல் 25 வயது வரை உள்ள ஒரு வாலிபரை ஒரு வீட்டில் கை, கால்களை கட்டி குப்புற படுக்க வைத்து தடியால் சிலர் அடிக்கின்றனர். பின்னர் உட்கார வைத்தும் அடிக்கின்றனர். இதில் அவருக்கு முகமெல்லாம் வீங்கி ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது.


‘இனி புள்ளங்களை ரேப் பண்ணுவியா’ என்று கேட்டு, கேட்டு அடிக்கின்றனர். அவன் ‘ரேப் பண்ண மாட்டேன்; விட்டு விடுங்கள்’ என்று கெஞ்சுகிறான். பின்னர் செருப்பை தலையில் வைத்தும், ரேப் பண்ணுவியா எனக்கேட்டும் அடிக்கின்றனர். இவ்வாறு அந்த பதிவுகளில் காட்சிகள் ஓடுகிறது. 100 பெண்களை பலாத்காரம் செய்தவன், என தலைப்பிடப்பட்டுள்ளதால், காட்சிகள் பரபரப்பாக வைரலாகி வருகிறது.


இதுபற்றி திருச்சி மாநகர போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருச்சியை சேர்ந்த இந்த வாலிபரால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவரின் குடும்பத்தினர் தான் இவ்வாறு அந்த வாலிபரை அடித்து உதைப்பது தெரியவந்தது. மேலும் இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று அந்த வாலிபர் மன்னிப்பு கேட்டதால், அவரை அந்த குடும்பத்தினர் விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.


தற்போது அந்த வாலிபர் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவரது போன் நம்பரையும் வாங்கி உள்ளனர். வீடியோவில் உள்ள காட்சிகள் குறித்து விசாரிப்பதற்காக வர வேண்டும் என்று அந்த வாலிபரை போலீசார் திருச்சிக்கு அழைத்துள்ளனர்.


அவரும் விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். கடந்த 2 நாட்களாக இருதரப்பினரின் வருகைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.



நேரடியாக விசாரணை நடத்தும் போதுதான் நடந்த உண்மை என்ன, உண்மையிலேயே அந்த வாலிபர் 100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தாரா என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பரவ விட்டது யார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html


http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html



Pages

No comments:

Post a Comment