வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நயன்தாரா குறித்து செக்ஸியாக, அறுவெறுக்கத்தக்க கருத்து தெரிவித்த ராதாரவி...
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

நயன்தாரா குறித்து செக்ஸியாக, அறுவெறுக்கத்தக்க கருத்து தெரிவித்த ராதாரவி...




Pages


கொலையுதி காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா உள்ளிட்டோர், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதி காலம்’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 23) நடைப்பெற்றது. இந்த படம் பல காலமாக தயாரிப்பில் கிடப்பில் கிடந்தது.


கொலையுதி காலம் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் பேசிய ராதாரவி, “நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. ஆனால் அவர் குறித்து வராத செய்திகளே இல்லை. அவர் பேயாகவும் நடிக்கிறார், சீதாவாகவும் நடிக்கிறார். ஏனென்றால் தமிழ் நாட்டு மக்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் மறந்து விடுகிறார்கள்.


முன்பெல்லாம் சாமி வேடம் போட கே.ஆர். விஜயாவை கூப்பிடுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை யாரை வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். அவர்கள் கும்பிடும் படியாவும் இருக்கிறார்கள், பலர் கூப்பிடும் படியாகவும் இருக்கிறார். ஏனென்றால் நிலைமை அப்படி போய்விட்டது.” என அறுவெறுக்காத்தக்க வகையில் விழாவில் ராதாரவி பேசி உள்ளார்.


இப்படி பேசு பவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ராதாரவி விழா மேடையிலேயே பலர் முன்னர் முன்னனி நடிகையை இழிவாக பேசிஉள்ளார். இவரை கண்டிக்க யார் இருக்கிறார்கள் என சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment