வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருவான்மியூர் பகுதியில் நள்ளிரவு போதை மயக்கத்தில் கிடந்த இளம்பெண்ணால் பரபரப்பு.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

திருவான்மியூர் பகுதியில் நள்ளிரவு போதை மயக்கத்தில் கிடந்த இளம்பெண்ணால் பரபரப்பு.!

* போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்
* பலாத்காரம் செய்து வீசப்பட்டாரா? விசாரணை




 திருவான்மியூர் 

பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் சாலையோரம் தன்னிலை மறந்து, இளம்பெண் ஒருவர் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவான்மியூர் 7வது மெயின் ரோட்டில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ேநற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணிக்கு பர்தா அணிந்த நிலையில் குடிபோதையில் சாலையோரம் தன்னிலை மறந்து கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தலைமை காவலர் வீராசாமி சம்பவ இடத்திற்கு சென்று, போதையில் சுயநினைவு இன்றி கிடந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளம்பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.




கருப்பு கலர் பர்தா மட்டுமே அணிந்து இருந்த இளம்பெண் வெகு நேரம் போதை தெளியாமல் சுயநினைவிழந்த நிலையிலேயே சிகிச்சை ெபற்று வருகிறார். பொதுவாக மது போதை என்றால் 3 அல்லது 4 மணி நேரத்தில் போதை தெளிந்துவிடும். ஆனால் நேற்று மதியம் வரை அவருக்கு போதை தெளியவில்லை.

 இதனால் இளம்பெண் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அதிகளவில் ஹெராயின் போன்ற உயர் ரக போதை மருந்துகளை உட்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



 கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவில் பண்ணை வீடுகள் மற்றும் கிளப்புகள் உள்ளதால் இளம்பெண்ணை ஆண் நண்பர்கள் அழைத்து வந்து போதை மருத்து கொடுத்து உல்லாசமாக இருந்து விட்டு சாலையில் வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் இளம்பெண் கிடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். போதை தெளிந்தால்தான் இளம்பெண் யார், யாருடன் வந்தார் என்பது குறித்து தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment